இன்று காலை 10.00மணியளவில் தமிழ் fm வானொலியில் ''இசை இருபது'' நிகழ்ச்சியில் நேரடி எனது சிறப்பு நேர்காணல் இடம்பெற்றிருந்தது. நிகழ்ச்சியை தயாரித்திருந்தார் அறிவிப்பாளர் கௌரி பிருந்தன். நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கியிருந்தார்கள் அறிவிப்பாளர்களான சுமித் மற்றும் நிவேதிதா ஆகியோர்.
இலங்கை கலைஞர்களுக்கு அதிகதிமாக களம் கொடுப்பதில் தமிழ் வானொலியும் பிரதான இடம் வகிக்கிறது. இலங்கை வானொலி வரலாற்றில் தனிப்பட்ட ஒருவரின் இறுவட்டு வெளியீட்டு விழாவுக்கு ஊடக அனுசரணை வழங்கி வெளியீட்டு விழாவை தமது கலையகத்தில் நடத்தி அழகு பார்த்தது தமிழ் FM வானொலி ஏனைய வானொலிகளுக்கு முன்னுதராணமாக இவ்வானொலி திகழ்கிறது. இதனை நேரிய பாதையில் நெறிப்படுத்திவரும் அறிவிப்பாளர் தமிழ் Fm வானொலியின் பணிப்பாளர் திரு. பரணிதரன் அவர்களுக்கும் அவரது நிறுவனத்தினருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.