Surprise Me!

விசாரணை ஆணையத்தின் பிடியில் சிக்கினார் சசிகலா- வீடியோ

2017-12-24 51 Dailymotion

பரப்பன அக்ரகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆன விசாரணை குழு முடிவெடுத்துள்ளது மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்தது . இதை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் ஆன விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது

அக் குழு ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் உடன் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது . இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆவணங்கள் அல்லது வீடியோ பதிவுகள் இருந்தால் அனைத்தையும் விசாரணை ஆணையத்தில் சமர்பிக்கும்படி நேற்று சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது

இதை தொடர்ந்து பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது . சசிகலாவை பெயிலில் எடுத்து சென்னை வரவழைத்து விசாரணை மேற்கொள்ளவும் சிறை துறை பெயில் தரவில்லை என்றால் சிறைச்சாலைக்கே சென்று விசாரணை நடத்தவும் விசாரணை ஆணையம் முடிவு எடுத்துள்ளது.