Surprise Me!

வெளிநாடு ஓடவில்லை : விக்ரம் கோதாரி- வீடியோ

2018-02-19 3,729 Dailymotion

ரோட்டோமாக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி, தான் எங்கேயும் ஓடவில்லை, இந்தியாவில்தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வங்கிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரோட்டோமாக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி ரூ.4,232 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார். இந்த சம்பவம் புயலை கிளப்பி இருக்கிறது. இப்போதுதான் நீரவ் மோடி 11,360 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அமெரிக்கா சென்று உல்லாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ரோட்டோமாக் பென்ஸ் என்பது பிரபல எழுதுகோல் விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இவர்களுக்கு நிறைய கிளை கம்பெனிகளும் இருக்கிறது. இதன் தலைவர் விக்ரம் கோதாரி 800 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து உள்ளதாக கூறப்பட்டது. தற்போதுதான் இவர் மொத்தமாக ரூ.4,232 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பவுன்ஸ் ஆக கூடிய செக் எதுவும் கொடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். எந்த விசாரணையாக இருந்தாலும் எதிர்கொள்ள தயார் என்றுள்ளார்.


I am very much here, Vikram Kothari, the promoter of Rotomac Pen said after reports of him fleeing emerged. It was reported that Kothari had gone missing after allegedly defaulting on repaying Rs 4,232 crore loans from five public sector banks.