பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சம்பளத்தை கண்டமேனிக்கு உயர்த்திவிட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஓவியா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு கோலிவுட்டில் மவுசு அதிகரித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் அவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தார்கள்.
இதையடுத்தே கோலிவுட்காரர்கள் ஓவியா பக்கம் திரும்பினார்கள்.
யாரோ வேண்டும் என்றே என்னை பற்றி வதந்தி பரப்புகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் என் சம்பளத்தை உயர்த்தவில்லை. நான் எந்த தயாரிப்பாளரிடமும் எனக்கு இவ்வளவு சம்பளம் தான் வேண்டும் என்று கேட்பது இல்லை என்கிறார் ஓவியா.
என்னை பற்றி பல வதந்திகளை பரப்புகிறார்கள். அதில் உண்மை இல்லை. நான் நல்ல கதையை தான் எதிர்பார்க்கிறேன். அதிக சம்பளம் எல்லாம் கேட்பது இல்லை என்று ஓவியா கூறியுள்ளார்.
Oviya siad that she has not increased her salary after Bigg Boss show. She is worried as some are spreading rumours about her in the industry.