தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து விட்டது. 15 நாட்கள் பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ள நிலையில் பராமரிப்புப் பணிக்குப் பிறகு மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளதோடு அந்தப் பகுதியின் இயற்கை வளமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu pollution control board rejects the request of Sterlite industry to reopen it after 15 days of maintainance, due to petition rejected sterlite factory facing continue closure.