des:தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டது; ஆகையால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில்ல் திரள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.