Surprise Me!

சென்னை, ஈரோடு, கன்னியாகுமரியில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள்- வீடியோ

2018-05-05 1 Dailymotion

கன்னியாகுமரியில் பேராசிரியர் ஒருவரிடம் இருந்து 14 சவரன் மதிப்பிலான தாலி சங்கிலியை பைக்கில் வந்த இளைஞர்கள் பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

திருமழிசையில் பத்திரிகையாளர் சங்கர் வீட்டில் 19 பவுன் நகைகளும், 14 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இரு சக்கர வாகனத்தை திருட முயன்றதாக இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். ஈரோடு பெருந்துறை சாலை ஆட்சியர் அலுவலகம் அருகே இரு சக்கர வாகனங்கள் நிறுத்தியிருந்தன. அப்போது அங்கு வந்த சிறுவர்கள் வாகனங்களை திருட முயற்சித்துள்ளனர்.