Surprise Me!

பயங்கர விபத்து ! மூன்று பேர் பலி- வீடியோ

2018-06-18 443 Dailymotion

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கொத்தகுருக்கி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், லோகேஷ் மற்றும் ரவி ஆகிய மூவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சூளகுண்டா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தனர் அதேபோல் மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுகுணாஸ் என்பவர் ராயக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்த இருசக்கர வாகனங்கள் காலன் கொட்டாய் என்ற இடத்தில் வரும் பொழுது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் கொத்தகுருக்கி கிராமத்திலிருந்து வந்த தேவராஜ், லோகேஷ் மற்றும் மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த சுகுனாஸ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த விபத்தில் ரவி படுகாயம் அடைந்தார். இந்த விபத்துகுறித்து தகவல் அறிந்த ராயகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ரவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.