Surprise Me!

மீட்பு பணிகள் மிகவும் மந்தம்! ராமதாஸ் குற்றச்சாட்டு- வீடியோ

2018-11-20 274 Dailymotion

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்





சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நிவாரண பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் ஆகியும் மின்சாரம் இன்னும் சரிசெய்யபடவில்லை. கிராமப்புற பகுதிகளில் உணவு கூட கிடைக்காமல் உள்ளனர். இதனால் அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர். கஜா மீட்பு பணியில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. மேலும் புயலில் போது சாய்ந்த 25,000 மின் கம்பங்கள் சரிசெய்யவில்லை. 1.5 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக முதல்வர் இதுவரையில் சந்திக்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்க்க வேண்டும். புயலால் 15,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது இதனை மத்திய குழு ஆய்வு செய்ய வேண்டும். என்றார்

Des: Dr Ramadoss, the founder of the founder, says that recovery works in the areas affected by the ghaj storm are becoming more dull.