சிக்னல் விளக்குகளை மதித்து செல்ல வேண்டும், போக்குவரத்து காவலர்கள் தரும் சிக்னலுக்கு வாகன ஓட்டிகள் கட்டுப்பட வேண்டும். வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்ட கூடாது. சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், வாகனத்தை ஓட்டும்போது கைபேசி உபயோகிக்க கூடாது, அதிவேகத்தில் வாகனத்தை இயக்க கூடாது மற்றும் பேருந்துகளில் படிக்கட்டு நின்று பயணம் செய்ய கூடாது கூடாது உள்ளிட்ட சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாநகர காவல் துறை சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடமாடும் போக்குவரத்து விழிப்புணர்வு வாகனத்தை மாநகர காவல் ஆணையாளர் சங்கர் தொடங்கி வைத்தார். மேலும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு ஒலிபெருக்கி அமைப்பு மற்றும் எல்.ஈ.டி திரையையும் மாநகர காவல் ஆணையாளர் சங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த காவல் ஆணையர் பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தகவல் ஒலிப்பெருக்கியில் பேசிய காவல் ஆணையர் சங்கர், சாலை விதிகளை மதித்து பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சாலை பயனத்தை அனைவரும் மேற்கொண்டு விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.
Salem mixing traffic awareness vehicle