Surprise Me!

திருமழிசை சோதனைச்சாவடியில் ஈ பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதால் பரபரப்பு - வீடியோ

2020-06-12 64,659 Dailymotion

கொரோனா வைரஸ் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு உரிய ஈ பாஸ் இருக்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் 15 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வந்த தகவலால் திருவள்ளூர் மாவட்டத்தின் நுழைவாயிலாக இருக்கும் திருமழிசை சோதனைச்சாவடி வழியாக அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனை போலீசார் தடுத்து நிறுத்தி உரிய ஈ பாஸ் இருந்தால் மட்டுமே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்படுகின்றன