Surprise Me!

களத்தில் 'மரண மாஸ்' காட்டிய காளை 'செல்லியம்மா'!

2020-11-06 0 Dailymotion

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் காளையர்களை விரட்டியடித்த பரம்புப்பட்டி செல்லியம்மன் கோயில் காளையை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. வாடிவாசலை விட்டு வெளியே வரும் காளைகள் மிரண்டு ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும். ஆனால், செல்லியம்மன் கோயில் காளை வாடிவாசலை விட்டு வெளியே வந்ததுமே காளையர்களை புரட்டி எடுக்கத் தொடங்கியது.இதுவரைக்கும் 15 ஜல்லிக்கட்டுகளில் வெற்றி பெற்றுள்ள செல்லியம்மன் கோயில் காளையின் வாழ்க்கை சோகமும் அவமானங்களும் நிறைந்தது.