கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு மே மாதத்தில் பெங்களூருவில் இவ்வளவு கனமழை பெய்ததில்லை. சாலைகள் நீரில் மூழ்கின. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. வடிகால்கள் நிரம்பி வழிந்தன. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.