Surprise Me!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் பிரதமரை சந்தித்த மற்ற மாநிலம் முதல்வர்கள்

2025-05-25 0 Dailymotion

நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது 140 கோடி இந்தியர்களின் லட்சியம் ஆகும். இந்த லட்சியத்தை எட்டிப் பிடிக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைய வேண்டும்.நாடு முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் நகரங்களை கட்டமைக்க வேண்டும் என பேசியுள்ளார்.