Surprise Me!

காட்டாற்று வெள்ளமாக கொட்டும் குற்றாலம் மெயின் அருவி! மூன்றாவது நாளாக குளிக்க தடை!

2025-05-27 0 Dailymotion

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வந்த தொடர் மழை காரணமாகவும் இன்று பகலில் பெய்த கனமழை காரணமாகவும் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஆக்ரோசமாக கொட்டுகிறது கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி கரைக்கு டூரிஸ்ட்டுகள் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் தடுப்பின் அருகில் நின்று டூரிஸ்டர்கள் ஆக்ரோஷமாக கொட்டும் மெயின் அருவியை ரசித்தவாரே செல்கின்றனர். ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது