Surprise Me!

இனி பாகிஸ்தானில் தண்ணீருக்கு கூட பஞ்சம்? தூதுவிடும் பிரதமர் ஷெரீப்! இந்தியா தந்த தரமான பதிலடி!

2025-05-27 2 Dailymotion

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தனது டோனை மாற்றியிருக்கிறார். காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட எல்லா சிக்கல்கள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஷெரீப் கூறியிருக்கிறார்.. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பாகிஸ்தானில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவே ஷெரீப் விரும்புகிறார். ஆனால், பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை என ஒன்று நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக மட்டுமே இருக்கும் என்றும் அந்த பிரச்சினையில் முடிவு எட்டப்படும் வரை வேறு எந்தவொரு விவகாரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என்றும் இந்தியா திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.