Surprise Me!

கிழக்குக்கரையில் அருள்பாலிக்கும் அக்களூர் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் ! திரளான பக்தர்கள் வருகை!

2025-06-08 652 Dailymotion

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு | தூக்கணாங்குளம் கிழக்குக்கரையில் அமர்ந்து அருள்பாலிக்கும் அக்களூர் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக ஆலய மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு யாகசாலையில் புனித நீர் கடங்கள் வைத்து நான்கு கால யாக பூஜை நடைபெற்று வேத மந்திரங்கள் ஒதி பூர்ணாஹீதி நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையிலே சுமந்து செல்ல வேதமந்திரங்கள் முழங்க மேல தாளங்கள் வாசிக்க கோயில் கோபுரத்தை அடைந்தது அதனைத் தொடர்ந்து கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது இக் கும்பாபிசேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து அம்பாளின் அருளை பெற்றனர்.

#kovildharisanam #kovilthiruvizha #temple #kovilupdate #thiruvizha #spritulity #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D